இங்கு தகுதிஇல்லாதவன் கையில் பணமும்,அதிகாரமும் விளையாடுகிறது.தகுதி உள்ளவன் த்ரித்திரவானாக இருக்கிறான் ஏன்?
ஒருபக்கம் செல்வம் படைத்தவர்கள்,மறுபக்கம் ஏழைகள்ஏன்?
ஒன்றாக படித்தவர்களில் ஒருவர் சிரமமின்றி அரசு வேலைபெறுகிறார்.
ஒருசிலர் தலைகிழாக நின்றாலும் வேலை கிடைப்பதில்லை.
நல்ல வசதி இருந்தும் சரி இல்லாத மனைவி, அடங்காத பிள்ளை .
வாங்கும் வசதி இருந்தும் அதை அனுபவிக்கமுடியாமல் நோய்களின் அணிவகுப்பு.
திருமணமே ஆகாமல் முதிர்கன்னி வாழ்க்கை சிலருக்கு, உடனடி திருமணமும் மழலை செல்வமும்தேடாமல் கிடைக்கிறதுசிலருக்கு.
பொருள்செல்வம் உள்ள இடத்தில் மக்கள் செல்வமில்லை.
மக்கள் செல்வமுள்ள இடத்தில் பொருளில்லை.
அறிவுபலம் உள்ள இடத்தில் உடல் பலமில்லை
உடல் பலமுள்ள இடத்தில் அறிவில் தெளிவில்லை.
ஒன்றாய் பிறந்த மனிதர்களிடையே என்
இந்த பாகுபாடு என்றாவது சிந்தித்து பார்த்தது உண்டா?
வாழ்வை கணத்துக்கு கணம் விழிப்புடன் கவனித்து
பார்த்ததுண்டாஅறிவின்வழிசிந்தித்து விடைகானமுடியாமல்
திகைத்தது உண்டா?சமூகத்தின்மேல் கோபமும் சுயகழிவிரக்கமும்
அடைந்ததுண்டா? இதுபோன்ற விடைகான முடியாத கேள்விகளை
சுமந்து களைப்பு அடைந்து அறிவினால் காணமுடியா விடையை
அனுபவத்தால் அடைந்தவன்நான்.என்
அனுபவம் மூலம் சர்ச்சையை ஆரம்பிப்போமா......?
வியாழன், 27 மே, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வலைப்பதிவு காப்பகம்
என்னைப் பற்றி
- arasaivadivel
- தேடல் வாழ்வை சுவாரசியப்படுத்துகிறது.அர்த்தப்படுத்துகிறது. தேடி பெற ஒன்றுமில்லாவிட்டாலும்......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக